திருவண்ணாமலையில் அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா 2553 மருத்துவர் காலிப் பணியிடங்கள் இரண்டு மாதங்களில் நிரப்பப்படும். அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 16 June 2024

திருவண்ணாமலையில் அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா 2553 மருத்துவர் காலிப் பணியிடங்கள் இரண்டு மாதங்களில் நிரப்பப்படும். அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.


திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா 13-6-24 அன்று நடந்தது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழக துணை வேந்தர் கே.நாராயணசாமி தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி,கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மருத்துவ கல்வி இயக்குநர் ஜெ.சங்குமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் கோ.அரிகரன் வரவேற்றார்.                   


விழாவில் 98 மருத்துவர்களுக்கு பட்டங்கள் வழங்கி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் கேத்லேப் அமைக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோர் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே விரைவில் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று வரும் நிதியாண்டில் கேத்லேப்  கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.                


மேலும் இந்த கல்லூரிக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்துத் தரப்படும். குளிர் சாதன வசதியுடன் கூடிய அரங்கம் கட்டித் தரப்படும். வகுப்பறை, நூலகம் போன்றவை அதி நவீன வசதிகளுடன் இந்த நிதி ஆண்டில் மாற்றித் தரப்படும், கடந்த 3 ஆண்டுகளில் மருத்துவக் காலிப் பணியிடங்களை வெளிப்படை தன்மையுடன் நிரப்பி வருகிறது. சமீபத்தில் 1021 மருத்துவர் பணியிடங்கள் கலந்தாய்வின் மூலம் அவரவர் விருப்பத்தின் பேரில் நிரப்பப்பட்டன. அதில் 193 பேர் இதுவரை பணியில் சேரவில்லை. அவர்களுக்கான கால அவகாசம் முடிந்து விட்டதால் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும்.                 


கடந்த சில மாதங்களுக்கு முன்பு 977 செவிலியர் பணியிடங்களும் 400க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்களும் நிரப்பப்பட்டன. இரண்டு மாதங்களில் 2553 மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 15ந் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது பட்டம் பெறும் மருத்துவர்களும் அதற்கு விண்ணப்பிக்கலாம்.        


மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் ஒரு கோடி பேர் பயன் பெற்றுள்ளனர்.இதயம் காப்போம், தொழிலாளர்களை தேடி மருத்துவத் திட்டம் என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.செயற்கை கருத்தரித்தல் மையம் எனும் மகத்தான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நம்மை காக்கும் 48 திட்டங்கள் மூலம் விபத்தில் சிக்கிய ஏராளமான உயிர்கள் காக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பிற்கு பிறகு இளம் வயதினருக்கும் இதய பாதிப்பு ஏற்படுகிறது. எனவே அகில உலக மருத்துவர்களை அழைத்து சென்னையில் மாநாடு நடத்தினோம். அந்த மாநாட்டில் இந்த பாதிப்புகள் குறித்து பேசப்பட்டது. மேலும் இதய நோயால் பாதிக்கப்படுவோருக்கு பயன்பபடுத்தும் மாத்திரைகள் துணை சுகாதார நிலையங்களிலும் வழங்கப்படுகிறது, இவ்வாறு அவர் பேசினார்.                         


விழாவில் எம்.பி. தரணிவேந்தன்,மாநில தடகளச் சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன்,எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி,பெ.சு.தி.சரவணன்,ஓ.ஜோதி,மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனுவாசன்,மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் சங்கீதா,கண்காணிப்பாளர் மாலதி உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.நிலைய மருத்துவ அலுவலர் கதிர் நன்றி கூறினார்.                            


- அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad