திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ரூ.2.23 கோடி சித்திரை மாத உண்டியல் காணிக்கை. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 1 May 2024

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ரூ.2.23 கோடி சித்திரை மாத உண்டியல் காணிக்கை.


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை மாத உண்டியல் காணிக்கை 30-4-24 அன்று நடந்தது. அதில் ரூ.2 கோடியே 23 லட்சத்து 71 ஆயிரத்து 962 ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மேலும் 365 கிராம் தங்கம் வெளிநாட்டு கரன்சிகளும் கிடைத்தது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் கோயில் நிர்வாகம் சார்பில் எண்ணுவது வழக்கம். அதன்படி பங்குனி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி,அண்ணாமலையார் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் 30-4-24 காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடந்தது. கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழுத் தலைவர் ஜீவானந்தம் மற்றும் அறங்காவலர்கள் ராஜாராம், கோமதிகுணசேகரன், சினம்பெருமாள் ஆகியோர் முன்னிலையில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.                       

உண்டியல் காணிக்கை எண்ணிக்கை முழுவதும் சிசிடீவி காமிரா மூலம் பதிவு செய்யப்பட்டது. மேலும் பக்தர்கள் நேரடியாக பார்க்கும் வசதியாக திருக்கோயில் வலைதளத்தில் (யூ டியூப்) ஒளி பரப்பப்பட்டது. அப்போது கோயில் உண்டியலில் ரூ.2 கோடியே 23 லட்சத்து 71 ஆயிரத்து 962ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும் 365 கிராம் தங்கம், 2838 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். 


மேலும் வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியலில் செலுத்தப்பட்டு இருந்தது. பின்னர் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை முடிந்ததும் அந்த தொகை உடனடியாக அண்ணாமலையார் கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது. மேலும் பல்வேறு காரணங்களால் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே இம்மாதம்  உண்டியல் காணிக்கை ரூ.2 கோடியை கடந்திருத்திருக்கிறது.                   


- அ.மு. முஸ்தாக் அஹமத், மாவட்ட செய்தியாளர், திருவண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad