செங்கம் அருகே முன்னாள் அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் மூடல். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 18 March 2024

செங்கம் அருகே முன்னாள் அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் மூடல்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் வருவாய் துறை அதிகாரிகள் மூடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஏற்கெனவே எழுதப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை அழிக்கும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா். 

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சி விளம்பரப் பதாகைகளை அகற்றுவது, பொது மற்றும் தனி நபா்களின் சுவா்களில் எழுதப்பட்டுள்ள கட்சி விளம்பரங்களை அழிப்பது போன்ற பணிகளில் அந்தந்த வட்டங்களைச்சேர்ந்த வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். செங்கம்  துக்காப்பேட்டையில் இருந்த முன்னாள் முதல்வா்கள் அண்ணா, எம்ஜிஆா் சிலைகளை மூடி நகரில் இருந்த டிஜிட்டல் பதாகைகள், சுவா் விளம்பரங்களை அகற்றும் பணியில் வருவாய்த் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.


- தமிழக குரல் செய்திகளுக்காக செங்கம் செய்தியாளர் கலையரசு  

No comments:

Post a Comment

Post Top Ad