அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடான ஆய்வுக் கூட்டம் நடந்தது. குழுவின் தலைவர் கே.அன்பழகன் தலைமை தாங்கினார். கலெக்டர் பாஸ்கர பாண்டியன், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்எல்ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி,சேவூர் எஸ்.ராமச்சந்திரன், சிந்தனைச்செல்வன், சிவக்குமார், பரந்தாமன், பூமிநாதன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கூடுதல் கலெக்டர் ரிஷப் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து குழு தலைவர் அன்பழகன் கூறியதாவது, தமிழ்நாடு முதல்வர் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அதன் மூலம் ஏராளமானோர் பயன் பெற்றுள்ளனர். அதற்காக முதல்வருக்கு குழு நன்றி தெரிவிக்கிறது. ஆன்மீக நகரமான திருவண்ணாமலையின் வளர்ச்சிக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் பல்வேறு பணிகளை நிறைவேற்றி வருகிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.
No comments:
Post a Comment