திருவண்ணாமலை நகராட்சியில் ரூ.97 1/2 கோடியில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 25 February 2024

திருவண்ணாமலை நகராட்சியில் ரூ.97 1/2 கோடியில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.


நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருவண்ணாமலை நகராட்சியில் ரூ.97 கோடியே 67 லட்சத்தில் விடுப்பட்ட பகுதியில் பாதாள சாக்காடை அமைக்கும் திட்டத்தினை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.     
                  

அதனை தொடர்ந்து திருவண்ணாமலை நகராட்சி அண்ணா நகர் 5வது தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில தடகள சங்கத் துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், நகர்மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் வசந்தி வரவேற்றார்.                   


இதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துக்கொண்டுபாதாள சாக்கடை திட்டத்தினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகரமன்ற துணை தலைவர் ராஜாங்கம், தி.மு.க.மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், நகர செயலாளர் கார்த்திக்வேல்மாறன், தி.மு.க.பிரமுகர் ஷெரிப், ஜின்னா, உள்ளாட்சி பிரமுகர்கள், நகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.                    


- அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad