கீழ்பெண்ணாத்தூர் தாலுகா கீக்களூர் கிராமத்தில் வசித்து வந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணையன் (வயது 69) இவர்,கடந்த 21ந் தேதி வீட்டில் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலும் பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் 23-2-24 அன்று இரவு கண்ணையன் மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து அவரது உடல் உறுப்புகள் குடும்பத்தாரின் ஒப்புதலுடன் தானமாக பெறப்பட்டது. அதனை தொடர்ந்து கீக்களுரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த கண்ணையன் உடலுக்கு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அரசு அறிவித்துள்ள திட்டத்தின் மூலம் அரசு மரியாதை செலுத்தினார்.
இதில் கீழ்பெண்ணாத்தூர் தாசில்தார் சரளா, மண்டல துணை தாசில்தார் மாலதி, மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் நந்தகோபால் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.
- அ.மு.முஸ்தாக் அகமத், மாவட்ட செய்தியாளர், திருவண்ணாமலை.
No comments:
Post a Comment