மாலை நிகழ்ச்சியாக வீரத்தமிழனின் போர் பறை,சீத்தாராமன் குழுவினரின் படவேட்டம்மாள் நாடக மன்றமும்,அந்தோனியார் பார்ட்டி இசை குழுவினரின் தமிழ் கிராமிய மற்றும் திரை இசை நிகழ்ச்சியும் நடந்தது. சாதனையாளர்களுக்கு விருதுகள்-பொற்கிழி வழங்கி விழாப் பேருரை மாண்புமிகு கே.என்.நேரு நிகழ்த்தினார். விழா நிறைவாக அருணை தமிழ் சங்கத் தலைவரும் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி, மாநில மருத்துவரணி துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, அம்பேத்குமார், இளைஞர் அணி நிர்வாகிகள், மகளீர் அணி நிர்வாகிகள், அயலக அணி மாவட்ட அமைப்பாளர் ஏ.டபிள்யூ.சர்தார் காசிம் உள்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.
- அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.
No comments:
Post a Comment