தண்டராம்பட்டு அருகே சே.கூடலூர் கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 18 January 2024

தண்டராம்பட்டு அருகே சே.கூடலூர் கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு.


தண்டராம்பட்டு அருகே சே.கூடலூர் கிராமத்தில் உள்ள பெரியார் சமத்துவ பொங்கல் விழா  நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துக்கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். அதனை தொடர்ந்து பொது மக்களுடன் பொங்கல் வைத்து பொங்கல் விழா கொண்டாடினார். 

அப்போது அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:- திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் பெரியார் சமத்துவபுரத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடக்கிறது. கருணாநிதியின் எண்ணத்தில் உதித்த முத்தான திட்டம் தான் பெரியார் சமத்துவபுரம் திட்டம் ஆகும்.                               


தற்போது முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த சமயத்தில் தான் இந்த திட்டம் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் 6 பெரியார் சமத்துவபுரங்கள் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவரும் சமம் என்ற திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறார். 


தமிழ் சமூகத்தின் அடையாளமாய் இருக்கிற நமது பாரம்பரிய நாட்டுப்புற நடனம் மற்றும் பாடல்களை ஊக்குவிக்க முதல் அமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். பாரம்பரியத்தை காப்பாற்றுவதற்கு இளைஞர்கள் வருங்காலங்களில் தங்களது பிள்ளைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை வைக்க வேண்டும். திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் இன்னும் பல்வேறு சிறப்பான திட்டங்கள் நிறைவேற்றப்படும், என அவர் பேசினார், நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி,கலெக்டர் முருகேஷ் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.


- அ.மு.முஸ்தாக் அகமத், மாவட்ட செய்தியாளர், திருவண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad