செங்கம் ஸ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் மார்கழி மாத நிறைவு விழா. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 18 January 2024

செங்கம் ஸ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் மார்கழி மாத நிறைவு விழா.


திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் ஸ்ரீ ருக்குமணி சத்தியபாமா வேணு கோபால பார்த்த சாரதி பெருமாள் கோவிலில்  மார்கழி மாத பிறந்ததிலிருந்து தினசரி காலை, மாலை இரு வேளைகளிலும் பஜனை, சொற்பொழிவு, சிறப்பு வழிபாடு, வைகுண்ட ஏகாதசி விழா,கூடாரவள்ளி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தை மாதம் பிறந்த நிலையில் மார்கழி மாத நிறைவு விழா கோவில் நிர்வாகம் சார்பில் நடைபெற்றது . இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் முன்னாள் தலைவர் பாண்டுரங்கன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் அன்பழகன், கலந்து கொண்டனர்.


பின்னர் செங்கம்  ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி சத்ய பிரபானந்தர் சொற்பொழிவு ஆற்றினார் இந்நிகழ்வில் ஏராளமான இறையன்பர்கள் கலந்து கொண்டனர்.


- செங்கம் செய்தியாளர் கலையரசு.

No comments:

Post a Comment

Post Top Ad