திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மாற்றம் புதிய ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் 6 மாவட்ட ஆட்சியா்கள் உள்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். முன்பு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்த முருகேஷ் வேளாண்மை துறை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த பாஸ்கர பாண்டியன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment