திருவண்ணாமலை சண்முகா அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி அவர்கள் 21-6-23 அன்று 11ம் வகுப்பு மாணவ/மாணவிகளுக்கு பாடபுத்தகங்களை வழங்கி மாணவர்களிடையே உரையாற்றினார். பின்னர் பள்ளியில் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.


இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ்,இ.ஆ.ப.மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மு.பிரியதர்ஷினி,மாநில தடகள சங்க துணை தலைவர் மரு.எ.வ.வே.கம்பன்,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி,பள்ளி தலைமை ஆசிரியர்,ஆசிரியைகள் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
- திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் முஸ்தாக் அகமத்.
No comments:
Post a Comment