மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 16 June 2023

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்.


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. 


அதன்படி, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட மாற்றுத்தினாளிகள் நல அலுவலர் தங்கமணி தலைமை தாங்கினார். இந்த முகாமில் பல்வேறு வகையான மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய பராமரிப்பாளர்களுடன் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை புதிதாக பெறுவதற்கும், புதுப்பித்துக் கொள்ளவும் நேரடியாக விண்ணப்பித்தனர். அப்போது சிறப்பு மருத்துவர்கள் அவர்களை பரிசோதனை செய்து அடையாள அட்டை பெற பரிந்துரை செய்தனர்.


இந்த முகாமிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் பலர் கலந்துகொண்டனர்.   


- செங்கம் தாலுக்கா  செய்தியாளர் கலையரசு. 

No comments:

Post a Comment

Post Top Ad