திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, தேசிய தரச் சான்று பெற்றுள்ளது. மருத்துவமனைகளில் கிடைக்கும் சேவைகளின் தரத்தை ஆய்வு செய்து சான்றளிக்க, 2006-ல் தேசிய மருத்துவமனை அங்கீகார வாரியம் ஏற்படுத்தப்பட்டது.உயரிய தனியார் மருத்துவமனைகள் மட்டுமே, இந்த வாரிய சான்றை பெற்றுள்ளன.


இந்நிலையில், நாட்டிலேயே முதன்முறையாக, அரசு மருத்துவக்கல்லுாரிக்கான தரச்சான்றை, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை பெற்றுள்ளது. திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், 2,500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் தினமும் சிகிச்சை பெறுகின்றனர். உள் நோயாளிகளாக, 900 முதல், 1,000 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
கடந்த மாதத்தில் மட்டும், 1,038 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடந்துள்ளது. தேசிய மருத்துவமனை அங்கீகார வாரியம், பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பின், தரச்சான்று வழங்கியுள்ளது.என திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் அரவிந்த் கூறினார்.
- செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment