திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மே19 ஆம் தேதி முதல் தொடங்கிய ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) மற்றும் விவசாயிகள் மாநாடு நடைபெற்று வந்தது. இந்நிலையில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணப்பட்டது.இதன் நிறைவு நாளான 25/05/23 அன்று ஜமாபந்தி நிறைவு விழா நடைபெற்றது.


இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் மு.பே.கிரி அவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதில் வட்டாட்சியர் முனுசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரேணுகா, துணை வட்டாட்சியர்கள் தமிழரசி, லதா வருவாய் ஆய்வாளர்கள் சரண்ராஜ், ஞானவேல், கிராம அலுவலர்கள் விஜயகுமார், கமல்ஹாசன், சந்திரகுமார் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர் .
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment