திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சியில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று 19/05/23 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பேரூராட்சி மன்றத் தலைவர் சாதிக் பாஷா தலைமையில் செயல் அலுவலர் லோகநாதன் முன்னிலையில் செங்கம் துப்புரவு மேற்பார்வையாளராக பணிபுரிந்த தட்சிணாமூர்த்தி என்பவர் கடந்த ஆண்டு பணியின் போது உயிரிழந்தார்.


இந்நிலை அவரது மகன் ராஜேஷ் என்பவருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் மு.பே.கிரி. அவர்கள் வழங்கினார் .உடன் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment