திருவண்ணாமலையில் ரேசன் கடை கட்ட பூமி பூஜை ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 8 April 2023

திருவண்ணாமலையில் ரேசன் கடை கட்ட பூமி பூஜை ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன், காமராஜ்நகரில் ரேசன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நகர மன்ற தலைவர் மோகனவேல் தலைமை வகித்தார். நகர செயலாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்எல்ஏ, மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய ரேசன் கடை கட்ட பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர். மேலும் அதே பகுதியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை ஒ.ஜோதி எம்எல்ஏ மற்றும் மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் மார்க்கெட் பகுதி, செய்யாறு பஸ் நிலையம், ஆரணி கூட்டு சாலை ஆகிய இடங்களில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, கூல்ட்ரிங்ஸ், மோர் ஆகியவை வழங்கினர். நிகழ்ச்சியில் சம்பத், லோகநாதன், பார்த்திபன், சின்னதுரை, அண்ணாதுரை, கார்த்திகேயன், துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


- செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை.

No comments:

Post a Comment

Post Top Ad