திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகர திமுக சார்பில் கோடை வெயிலின் தாக்கதிலிருந்து தடுக்கும் வகையில் செங்கம் பேரூராட்சி மன்ற தலைவர் சாதிக் பாஷா தலைமையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் மு.பே.கிரி கலந்து கொண்டு நீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், நீர், குளிர்பானங்கள், பழங்கள் ஆகியவற்றை வழங்கினார். உடன் நகர செயலாளர், ஒன்றிய செயலாளர் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment