திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் கீழ்வணக்கம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட துள்ளுகுட்டிபாளையம் மற்றும் தேசூர்பாளையம் ஆகிய பகுதிகளில் சுமார் ரூபாய் 1 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டில் கனிம வள நிதியில் கட்டப்பட உள்ள கட்டிடங்களுக்கு செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் மு பே கிரி அவர்கள் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் பொன் முத்து ஒன்றிய கழக செயலாளர்கள் ரமேஷ், செந்தில் குமார் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள்,திமுக கழக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment