ஆன்லைன் மோசடிகாரர்களால் இழந்த பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 19 July 2024

ஆன்லைன் மோசடிகாரர்களால் இழந்த பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.


திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 2 நபர்கள் டெலிகிராம் செயலியின் (Telegram) மூலம் தெரியாத நபர்களிடமிருந்து Part Time Job-க்கு (Work from home) குருஞ்செய்தி (SMS) வந்ததாகவும் அதில் கூறும் வேலையை செய்தால் அதன் மூலம் பணம் பெறலாம் என கூறியதாகவும், இதற்கு முன்பணம் செலுத்தி முதலிடு செய்ய வேண்டும் எனவும் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி, அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்தியுள்னர். பின்பு தாங்கள் முதலீடு செய்த பணத்தை எடுக்கலாம் என linkல் சென்ற போது கூடுதலாக பணத்தை முதலீடு செய்ய அறிவுறுத்தப்பட்டதாகவும், பிறகு அவர்களை தொடர்பு கொள்ள முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.


பின்னர் அவர்கள் போலியான இணையதளத்தில் பணத்தை இழந்ததை அறிந்து உடனடியாக இழந்த பணத்தை மீட்டு கொடுக்குமாறு சைபர் கிரைம் பண மோசடி புகார் எண் 193 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு புகார் அளித்துள்ளார்.


இதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன். இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் M.பழனி அவர்களின் தலைமையிலான சைபர் கிரைம் போலிசார் உரிய விசாரணை செய்து தரிதமாக செயல்பட்டு அவர்கள் இழந்த பணத்தை வங்கியின் உதவியுடன் மீட்டனர்.


மேற்படி இன்று திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள், அவ்விருவரையும் நேரில் அழைத்து மிட்கப்பட்ட பணம் மொத்தம் ரூ.9,98,021/- ஐ உரியவர்களிடம் ஒப்படைத்தார். இதில் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் M.பழனி அவர்கள் உடனிருந்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad