திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் கல்விக் கடன் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் இன்று (15-2-24) நடைபெற்றது. இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப், DRO பிரியதர்ஷினி, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் அருண்பாண்டியன், திறன் மேம்பாட்டு உதவி இயக்குநர் தியாகராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திருமதி/கௌரி மற்றும் அனைத்து வங்கி அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
இம்முகாமில் சுமார் 400 மாணவ மாணவிகள் பங்கேற்றதில் 119 மாணவ மாணவிகளுக்கு மட்டும் சுமார் 7 கோடி மதிப்பில் பல்வேறு வங்கிகள் மூலம் கடனுதவி அளிக்கப்பட்டது.
- அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.
No comments:
Post a Comment