நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் தி.மு.க.வெற்றி பெறும், திருவண்ணாமலையில் அரசு கொறாடா கோ.வி.செழியன் பேச்சு - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 20 February 2024

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் தி.மு.க.வெற்றி பெறும், திருவண்ணாமலையில் அரசு கொறாடா கோ.வி.செழியன் பேச்சு


திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி "உங்களை மீட்க ஸ்டாலின் குரல்" என்ற மாபெரும் பொதுக் கூட்டம் திருவண்ணாமலை திருவள்ளுவர் சிலை அருகே 19-2-24 அன்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமை தாங்கினார். 

சி.என்.அண்ணாதுரை,எம்.பி.மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சரவணன், மு.பெ.கிரி, அ.நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் தேவராஜி வரவேற்றார், இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு கொறடா கோ.வி.செழியன் கலந்து கொண்டு பேசுகையில்:- வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம்,புதுச்சேரியில் தி.மு.க.40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.              


காமராஜர் 2 பிரதமரை உருவாக்கியதால் அவரை கிங் மேக்கர் என்று சொல்கிறோம். 5 பிரதமர்களை உருவாக்கி காட்டிய தலைவர் கருணாநிதியை "சூப்பர் கிங் மேக்கர்" என்று அழைக்கலாம். தலைவர் கருணாநிதி யாரை பிரதமர் என்று கை நீட்டி காண்பித்து பிரதமர் ஆக்கினாரோ,அதே போல் நாளைய தினம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கை நீட்டி பிரதமர் என்று எடுத்து சொல்ல முதல் வெற்றியாக திருவண்ணாலையில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.        


கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இரா.ஸ்ரீதரன், பொன்முத்து, மாநில  பொறியாளர் அணி செயலாளர் கருணாநிதி, மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், நகர செயலாளர் கார்த்திக்வேல்மாறன், அருணை கன்ஷ்ட்ரசுஷன் துரை வெங்கட், வேலூர் எம்.எல்.ஏ. கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன், மாவட்ட அமைப்பாளர் நேரு, அயலக அணி மாவட்ட அமைப்பாளர் எ.டபிள்யூ. சர்தார் காசீம், ஒன்றிய செயலாளர் மெய்யூர் சந்திரன் உள்பட பலர் கலந்துக் கொண்டனர். முடிவில் மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் நன்றி கூறினார்.                                        


- அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad