திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுக்கா அடுத்த பாண்டியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மகள் ( வயது 15) சிறுமி கடந்த 1தேதி திடீரென மாயமானார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை காணவில்லை என்று உறவினர் வீடுகளிலும் மற்றும் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர் ஆனால் சிறுமி எங்கு தேடியும் கிடைக்கவில்லை . மனம் வேதனை அடைந்த பெற்றோர்கள் உடனடியாக காணாமல் போன எனது மகளை கண்டு பிடித்து தரவேண்டும் என்று புகாரின் பேரில் தூசி காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- செய்யாறு தாலுக்கா செய்தியாளர் ஸ்டீபன்.


No comments:
Post a Comment