திருவண்ணாமலை மாவட்டத்தில், போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பாதிப்பு ஏதுமின்றி, வழக்கம் போல பஸ்கள் இயக்கம். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 10 January 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில், போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பாதிப்பு ஏதுமின்றி, வழக்கம் போல பஸ்கள் இயக்கம்.


திருவண்ணாமலை மாவட்டத்தில் வழக்கம் போல் பஸ்கள் இயங்கியது பொதுமக்களுக்கு பாதிப்பு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பஸ் இயக்கப்பட்டது. பழைய ஓய்வூதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. 

அதில், அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன. இப்போராட்டத்தை கைவிடக்கோரி அரசு தரப்பில் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, நேற்று திட்டமிட்டபடி போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டன. ஆனாலும், பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, தடையின்றி பஸ்களை இயக்க தேவையான முயற்சிகளை அரசு போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டது. ஊழியர் பற்றாக்குறையை சமாளிக்க, தற்காலிக பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருந்தனர்.


இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால், பாதிப்பு ஏதுமின்றி வழக்கம் போல பஸ்கள் இயங்கின. தொமுச உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் போக்குவரத்துக் கழக பணிமனைகளுக்கு சென்று, பஸ்களை இயக்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 11 பணிமனைகளில் மொத்தம் 560 பஸ்கள் உள்ளன. 


அதில், 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் வழக்கம் போல இயங்கின. அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட ஒருசில தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் மட்டும் பணிக்கு வரவில்லை. ஆனாலும், அதை ஈடு செய்யும் வகையில், அரசு போக்குவரத்துக்கழகம் மாற்று ஏற்பாடுகளை செய்திருந்ததால், போக்குவரத்தில் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.


இது குறித்து, தொமுச பேரவை மாநில செயலாளர் சவுந்திரராஜன் கூறுகையில், 'தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அரசு உறுதி அளித்திருக்கிறது. நிச்சயம் படிப்படியாக கோரிக்கைகளை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி பஸ்களை இயக்க ஒத்துழைக்கிறோம். திருவண்ணாமலை மாவட்டத்தில், பாதிப்பு ஏதுமின்றி வழக்கம் போல அனைத்து வழித்தடங்களிலும் பஸ்கள் இயக்கப்படுகிறது. அனைத்து பணிமனைகளிலும் தேவையான எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பணிக்கு வந்துள்ளனர். 


இந்த மாவட்டத்தை பொறுத்தவரை, வேலை நிறுத்தத்தால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றார். இந்நிலையில், பணிக்கு வரும் தொழிலாளர்களை யாரும் தடை செய்யாமல் இருப்பதற்காக, அனைத்து பணிமனைகளிலும், பஸ் நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், வேலை நிறுத்த அறிவிப்பு காரணமாக, வெளியூர் பயணங்களை பெரும்பாலான பொதுமக்கள் தவிர்த்ததால், பஸ்களில் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

 

- செய்தியாளர் கலையரசு 

No comments:

Post a Comment

Post Top Ad